Thursday, March 21, 2013

மறுபிறப்பு/தாய்மை!


ஒற்றை அணுவாய்
உருவாகி
ஓராயிரம் ரசவாதம் கடந்து
சிசுவாய் உருமாறி
பரிணமித்து
உண்ண அவளுணவைக் களவாடி
உயிர்க்க அவள் மூச்சை கடன்வாங்கி
புரண்டு அவளை அழவைத்து
உதைத்து அவளைப் பிதற்ற வைத்து
கருவாய் இருந்து நரனாய் மாற,
அவள் நாச்சுவை கெடுத்து
அவள்
உடலின் மொத்த எலும்புகள் உடைக்கும் அளவிற்கு
வலி கொடுத்து
அழ வைத்து பிறந்துவிட்ட,

நாம் அழக் கண்டும் உயிர் துடிக்கிறாள்
அன்னை!

3 comments:

  1. எப்போது உங்கள் கவிதை படித்தாலும் நெகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகிறேன்

    ReplyDelete