மரித்த மலர்களுக்கான என் கவியஞ்சலி....
இச்சை எச்சிலில்
சில மலர்கள்
கொளுத்தப்படுகின்றன!
காதலென்றும்
காமமென்றும்
ஆசை வெறிக்கு கரிபூசி
திரையிட்டு
மைப்பூசிய
வேல்விழிகளை
கொன்றுபோடும்
கொலையவதாரம்
தொடங்கிக்கிடக்கிறது!
உடை என்றும்,
வயதென்றும்
மறைக்க சில
முகமிருக்க
மரித்த மலர் சருகுகள்மேல்
நீர் ஊற்றி
சாம்பல் கரைக்கும்
வதந்திகள்!
தீர்வில்லாமல்
தீராமல்
வெறிநோய் பிடித்த மானுடனின்
செய்கைகள்
செயலிழக்க
ஏசுவும்,கண்ணனுமாய்
அவதரிக்க வேண்டுமோ?!
தீர்ப்பிட வேண்டாம்
வாதிட வேண்டாம்
வளர்க்கையில்
சொல்லிக்கொடுங்கள்
பெண்ணை மதிக்கும்
கலையை!!!!
என் கவிதையின்
முடிவும்
அப்பெண்களின் முடிவைப்போல்
திருத்தி எழுதப்பட வேண்டும்
பெண்ணின் தலை எழுத்து
என்பதை உணர்த்த!!!
No comments:
Post a Comment