Wednesday, February 13, 2013

ஆசையாய் ஓரு கடிதம்!

சுருக்கமாய் கடிதமொன்று
என் அன்பின் கண்ணாடியாய்!

படி

பின் பதில் உரை,
உன்னால் உறைந்த இக்கோழை
பேதைக்கு!

உன் கரம் கோர்த்து

கதை பேசி
காதோரம் கிசுகிசுக்க
ஓர் ஆசை!

உன் சுவாச பூங்காற்றை

என்
நாசியில் ஏந்திக்கொள்ள
ஓர் ஆசை!

உன்னோடு உடன் அமர்ந்து

உன் உணவை
அன்னையாய் உனக்கு ஊட்ட
ஓர் ஆசை!

நளனாய் நீ மாற
உன் நலம் பேணி அடிபணிய
ஓர் ஆசை!

என் இதழ் சிரிப்பின்

காரணியாய்
நீ மட்டும் இருந்திட
ஓர் ஆசை!

ஈரிதயமாய்

நீயும் நானும் இருக்க
நீ துடித்தடங்க
நானும் அடங்கிட
ஓர் ஆசை!

நானாய் நீயும்

நீயாய் நானும்
உருமாறிட உளம் மறக்க
ஓர் ஆசை!

என்றோ உரைத்திருப்பேன்

போதி மரத்தானின்
போதனை தடுத்திட்டது
என் ஆசையைச் சொல்ல!


சொல்லாமல் இறப்பேனோ
என்றஞ்சியே உரைக்கிறேன்
இப்போதும்!

என் ஆசை மூட்டைகளை

மூச்சடக்கி படைத்துவிட்டேன்
மூட்டையை
அவிழ்க்கவும்,அழிக்கவும்
உரிமை உனக்கே!

ஒருதலைக் காதலோ

என்றஞ்சி
இருதலைக்கொள்ளி எறும்பாய்
உன்னவளாகத் துடிக்கும்
உன் அவள்!!!

16 comments:

  1. Super Sister @iamvaalu

    ReplyDelete
  2. நல்லா இருக்கே.. :)

    ReplyDelete
  3. படிக்கும் போதே தூங்கிட்டேன் அவ்வ்வ்..:-)
    @HarryGowtham

    ReplyDelete
    Replies
    1. Very Happy it works and helps u as a sleeping dose, Thankie :))

      Delete
  4. அட பொண்ணுங்க விரும்பற அளவு பசங்க வந்துட்டோம்ன்னு சந்தோசமா இருக்கு!!!! நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
    Replies
    1. The word you said in your post made me to write this, :)) Thank You :))

      Delete
  5. Wow நல்லா இருக்கு சிஸ்டர் @slmvenkat

    ReplyDelete
  6. உன்னோடு உடன் அமர்ந்து
    உன் உணவை
    அன்னையாய் உனக்கு ஊட்ட
    ஓர் ஆசை!

    ஆஹா என்ன ஒரு வரி... சூப்பர்...

    ReplyDelete