Thursday, November 14, 2013

வேண்டுகோள்!

எத்தனை இழந்திருப்பேன்,  மீட்கவே முடியாமல்! எப்படி கடப்பேன்,
அந்த 9 மணி 35 நாழிகையை நாளைய பொழுதில் என்பதெல்லாம் புதிர்தான்!

http://pesatheriadaval.blogspot.in/2013/03/blog-post.html

இது நடந்து ஒரு வருட காலமாயிற்று! மறக்கவே இயலாத 365 நாட்கள்!
"திட்டவாச்சும் நீ வீட்ல இருக்கனும், வந்துரு!" என மானசீகமாய் கதறிய இதயத்தின் பேரோசை, இன்னமும் முடியாத உபாதைகள், வேதனைகள்!

எத்தனை இழந்திருப்பேன்,  மீட்கவே முடியாமல்!
கடந்த சில வாரங்களாக இதயத்தின் ஒவ்வொரு அறையினையும் குடைந்தெடுக்கும் அவ்வலியினின்று மீண்டு எழுதுகிறேன் இப்பதிவினை!

விவரிக்க முடியாத சில இதய குறுகுறுப்புகளுக்கு வர்ணமோ, வார்த்தையோ உருவம் கொடுக்காது! அஃதப்படியே இப்பதிவும்!

துளிர்த்து சிதறிய விழிநீரை, அதன் வலியை உணர்ந்தாலன்றி புரியாது!

PLEASE DO WEAR HELMET!
AVOID RASH DRIVING!
DON'T DRINK AND DRIVE!


No comments:

Post a Comment