Saturday, February 8, 2014

ஒரு சிலாகிப்பு! ஒரு Face palm!

இந்த இரு நாட்களில் இரு வேறு  நிகழ்வுகளை கடந்திருக்கிறேன்... முதலில் Face palm என்னவென்பதை சொல்லிவிடுகிறேன்...

நேற்று காலை வேலை வெட்டி இல்லாமல் இன்ஸ்டாவுக்கு ஃபோட்டோ தேடிக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்றேன்... அப்போது அவளைப் பார்த்தேன்.. பக்கத்து வீட்டு காலனி வீடுகள் ஒன்றில் வசிப்பவள்..வீட்டுக்கு ஒரே பெண் அவள்... தோழிக்கு தங்கை முறை... பத்தறை மணி வெயிலுக்கு அவ்வளவு அழகாய் ஜொலித்தாள்...

”பாப்பா நீ ரொம்ப அழகா இருக்கம்மா என்றேன்”

துணியைப் பிழிகையில் கோபமாய் ஒரு முறைப்பு... “ நான் ஒன்னும் பாப்பா இல்ல, இன்னும் ரெண்டு வருஷத்துல எனக்கு கல்யாணம் என்றாள்”

நான் ஷாக்காகி ”என்னம்மா படிக்கிறே என்றேன்” “பத்தாங்கிளாஸ்” என்கிறாள். சரிம்மா மாப்பிள்ளைக்கு என்ன வயசு? என்ன பண்றார் என்கிறேன்... அவளோ கூலாக 29 வயசு ஆகுது அவங்களுக்கு, இப்போ மெட்ராஸ்ல வேலை பாக்குறாங்க என்கிறாள்...

மாப்பிள்ளை சொந்தமாம்மா என்கிறேன்... அதற்கும் இல்ல பிறத்தி என்கிறாள்...

ஆகக்கடைசியாக அதுக்குள்ள கல்யாணம் பண்றோமேன்னு வருத்தமா இல்லியா? படிக்கலியேன்னு வருத்தமா இல்லியா என்கிறேன்... சொன்னாளே ஒரு பதில்!

”படிச்சி என்னக்கா பண்ணப்போறேன்? பொம்பளப்புள்ள நான்.. கெட்டிக்குடுத்துட்டா அப்பா அம்மாவும் நிம்மதியா இருப்பாங்க, பொம்பளப்புள்ளைய வீட்டுல வெச்சிருக்கதும் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்ட மாதிரியாச்சே!... படிச்சும் ப்ரயோஜனம் இல்ல, அதான் கல்யாணம் பண்ணி செட்டிலாவலாமேன்னு.... என்னை இவ்ளோ கேக்குறீங்களே, காலேஜுதண்ட போய் படிச்சிட்டு நீங்க வீட்லதானே இருக்கீங்க.... எங்கக்காவயே கண்ணாலமெல்லாம் பதினொன்னாம் கிளாஸ் முடிச்சிட்டு பண்ணிக்காதேன்னீங்களாம்... சொல்ச்சி உங்கட்ட பேசாதேன்னு”

தட் நல்லதுக்கு காலமில்லை, Facepalm Moment....

அந்த சிலாகிக்க வைத்த சம்பவம் பேஸ்புக்கில் நிலைத்தகவலாக எழுதியதுதான்....

காலை 10.30 மணிக்கும் மேல் இருக்கும், ஒரு பாட்டி சிறுவனோடு வந்தார்கள்.. “வீட்ல வேலை இருக்காம்மா, புல்லு செதுக்குறது மாதிரி என்று கேட்டுக்கொண்டு.. பூவிழுந்த கண்.. ஒரு கண் தான் தெரியும் போல..
வேலை இருக்கு எவ்ளோ கேப்பீங்க என்றேன்.. 
காசு வேணாம்மா வீட்ல மீந்த சாப்பாடு இருந்தா கொடும்மா என்றார்கள்.. ஒரு வீட்ல சாப்பாடு தரேன்னாங்க, வேலை செஞ்சேன் ஆனா காசுதான் கொடுத்தாங்க. ஓட்டல்லியும் டீ மட்டும்தான் இப்போதைக்கு இருக்குன்னுட்டான்.. பேரன் பசிதாங்க மாட்டான்.. அதான் என்றார்கள்...
சாப்பாடு இப்போதான் ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்தேன்,
பழையதுதான் இருக்கு என்று தயங்கினேன்.. வாங்கிக்கொண்டார்கள்... (பிச்சைக்காரன் வாங்க மறுத்துவிட்டான்)சிறுவனிடம் பிஸ்கட் பாக்கெட் இரண்டு கொடுத்தேன்.. வேல செய்யாம இனாமா ஏதும் வான்கூதாது... பாத்தி சொல்லீக்கு என்றான்... இது வேலைக்காகத்தான் என்று சொல்லி பாட்டி ம்ம் என்ற பின்னர்தான் வாங்கிக்கொண்டான்..

பெரும்பாலும் இம்மாதிரி உள்ளவர்களை மகன் வீட்டைவிட்டு துரத்தியிருப்பார். ஆனால் இவரின் பெரிய மகன் மனைவியோடு விபத்தில் இறந்துவிட்டாராம். மகளுக்கு இப்போதான் திருமணம் முடிந்தது.. சின்னவன கடன் வாங்கி இஞ்சினேர் ஆக்கிட்டேன், வெளிநாட்டுல எல்லாக் கடனயும் அடைக்க கஸ்டப்பட்றான்.. அதான் என் ஜீவனம் நானே பாத்துக்குறேன்னு சண்ட போட்டு வேலைக்கி போறேன்... என்கிறார் இந்த வெள்ளையம்மாள் பாட்டி... 
இதில் ஹைலைட்டே அந்த பொடியன் தான்... பாட்டிக்கு உதவுகிறான்.. படிப்பென்றால் உயிராம்.. ”அப்பாம்மாக்கு ஊச்சி போட்டாங்க ஆனா அப்பாம்மா சாமிட்டே போட்டாங்க... நான் ஊச்சி போட்டு யாரும் சாமீட்ட போவாம பாத்துக்னும் என்கிறான்...” படிப்பு சொல்லித் தரேன் சாயங்காலம் வரியா என்றேன்.. ”நாண்தாம்.. ’இனாமா ஏதும் நாண்தாம்..’” என்கிறான்.. பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு ஒளவையார் சொல்லிருக்காங்கடா என்றேன்.. அந்த பாத்தி அப்பி சொல்ச்சு என்பாத்தி இப்பி சொல்ச்சு.. என்கிறான்... அவனை பள்ளிக்கனுப்ப நாளை கூலி வேலைக்கு செல்லப்போகிறாராம் பாட்டி!


இருவேறு அதிகமாய் பாதித்த நிகழ்வுகள் இவை! எத்தனையோ உணர்வுகள் இவற்றுள்!.. பகிரத் தோண்றியது...

படித்தமைக்கு நன்றி....
நறுமுகை!

3 comments:

  1. 1) படிச்ச அவங்க சகோதரியே படிப்பு வேணாம் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றத பாக்கும்போது, என்ன மாதிரியான சமூகத்தில் வாழறோம்னு தோணுது

    2) தன்மானம் அப்டிங்கற வார்த்தை இன்னமும் வாழ்ந்துகிட்டு தான் இருக்கு, அந்த பாட்டிக்கும், பையனுக்கும் தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  2. 1. இஸ்லாமிய அடிப்படைவாதம் - Comfotablity இதெல்லாம் என்ன கேட்டியே இதான்.

    2. :-)

    ReplyDelete
  3. Nice! Very well written human interest story. Feeling proud of that lady. hats off! My salute to her.

    ReplyDelete