Monday, February 3, 2014

பெண்களே, Please Take Care!

இந்தப் பதிவை எழுதுவது குறித்து நெடுநாளாய் ஒரு தயக்கம், இப்போதாவது எழுதிவிடுகிறேன்...

கிராமப்புறங்களில் வாழ்வதில் இருக்கும் ஒரு பெரும் செளகர்யம்/அசெளகர்யம் எல்லா வீட்டுக் கதைகளும் நம் வீட்டு வரவேற்பறைக்கே கிடைத்துவிடும்...
சிலர் கேட்டுவிட்டு அப்பாடா நம்ம வீட்டு கதைக்கு இது மோசம் என திருப்திபட்டுக்கொள்வார்கள், சிலர் வருந்தி அவர்களுக்காக இரங்குவார்கள்... அப்படியாக ஒரு பெண்ணைப் பற்றிய சோகமான ஹேப்பி எண்டிங் கதை தான் ரீசெண்ட் ஹிட்... 

அவளுக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியிருந்ததாம், Pregnancy Testக்காக ஒரு அரைகுறையை அணுகியிருக்கிறார்கள் (confirm ஆகிட்டா பெரிய டாக்டர்ட போயிக்கலாம் எதுக்கு வீண்செலவு என்ற நல்லெண்ணம்) அந்த அரைகுறை Scan செய்ய சொல்லியிருக்கிறது, பின்னர் தான் தெரியவந்தது அவளுக்கு கருப்பையில் கட்டி இருப்பது.. அரைகுறையோ டவுனுக்கு அழைச்சிட்டு போங்க, கேன்சர் மாதிரி தெரியிது என்றுவிட்டார்..

கணவனுக்கோ கடும் வேதனை, கோபம், ஹீரோயினோ கண்கவர் கண்ணாளன் தானே என்ற தைரியத்தில், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் புலம்பித் தீர்க்கையில் தப்பித் தவறி தனக்கு திருமணமாவதற்கு ஒரு வருடம் முன்வரை இருந்த Irregular Periods பற்றியும், அப்போதைக்கு Scan செய்தபோதெல்லாம் இப்படி வரவில்லையென்றும் கூறியிருக்கிறாள். அவ்வளவுதான் கேன்சர் உள்ளவளை ஏமாற்றி தன் தலையில் கட்டிவிட்டதாகவும் இன்ன பிற வசவுகளாலும் தாட் பூட் தஞ்சாவூர் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க இவள் அதிர்ந்து போக.. பிரச்சினை டைவர்ஸ் வரை சென்றுவிட்டது....

ஏழை குடும்பம் வேறு... கட்டிக்கான சிகிச்சை முடித்து, டெஸ்ட் செய்து பார்ததற்கு அது வெறும் தண்ணீர் கட்டிதான் என்றுவிட்டார்கள்.. பின்னர் ஊர் பெரியவர்கள் சேர்ந்து டாக்டர் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிக் கொடுத்து பிரச்சினையை முடித்தார்கள்... 

ஓரு மாதம் முன்புதான் ஒரு தங்கச்சிலைக்கு அம்மாவாகியிருக்கிறாள் அப்பெண்...

விஷயம் 1: எப்படிப்பட்ட சின்ன விஷயம்  ஆனாலும் மருத்துவ பிரச்சினைகளை கணவரிடம் மறைப்பது ஆபத்து...

விஷயம் 2: உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு பூப்படைந்தது முதலே நிறைய பிரச்சினைகள் இருக்குமாம்(நம்ம பாஸ்ட்ஃபுட் கலாச்சாரம் அப்படி) அதனால் உடல் எடையை BMI அளவிற்கே பார்த்துக்கொள்ள வேண்டுமாம், ஹீமோக்ளோபின் அளவும் பெண்ணுக்கு சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அதனாலும் பல பிரச்சினைகள் வரலாம். 

விஷயம் 3: பெண்கள் திருமணத்திற்கு முன், Hormone மாத்திரைகளை ஒரு மருத்துவருக்கு இருவரைக் கேட்காமல் உட்கொள்வது தவறாம்...

விஷயம் 4: இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை கேன்சர் அதிகமாய் அச்சுறுத்தி வருகிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது நம்மைநாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டுமாம், சந்தேகிக்கும் படியாக எந்த கட்டி இருந்தாலும் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில் ஆரம்பக் கட்டங்களிலேயே மருத்துவரை சந்திப்பது மாத்திரை, ஊசிகள் இவைகளோடு நோயை குணமாக்கிக் கொள்ள உதவும்...தேவையெனில் HPV vaccine shot (Injection). Human papilloma virus shot (Injection)கூட எடுத்துக்கொள்ளலாம்<<மருத்துவரின் அனுமதி பெற்று>>.

விஷயம் 5: எதுவானாலும் அரைகுறையை அணுகாதீர்கள், முதலுதவி போன்றவைக்கு வேண்டுமானால் அவர்கள் உதவலாம்....

-------------------------------------------------------------படித்தமைக்கு நன்றி-----------------
பி.கு: நான் டாக்டரெல்லாம் இல்லை. பெண்களுக்கான உபாதைகள் பெருகி வருகிறது, பல பெண்கள் தயங்குவதில்லை, சிலர் வெட்கப்பட்டு தயங்கி மாத்திரைகளால் குணமாக்கிக் கொள்ளவேண்டியதையெல்லாம் அறுவைசிகிச்சை வரை இட்டுச் செல்கிறார்கள்... என அந்தப்பெண்ணை பரிசோதித்த பெண் மருத்துவர் சொன்னாராம்... அந்த மருத்துவர் சொன்னவைகளைத்தான் இங்கே எழுதியுள்ளேன். தவறிருப்பின் திருத்தவும்.

No comments:

Post a Comment